`நீ வெளிய வா பாத்துக்கிடுதேன்' - கல்லூரிக்குள் புகுந்து மாணவனுக்கு மிரட்டல்.. நெல்லையில் பரபரப்பு

Update: 2024-10-19 07:39 GMT

`நீ வெளிய வா பாத்துக்கிடுதேன்' - கல்லூரிக்குள் புகுந்து மாணவனுக்கு மிரட்டல்.. நெல்லையில் பரபரப்பு

நெல்லை மாவட்டம் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்களுக்கு இடையே மோதல் வெடித்ததால் பரபரப்பான சூழல் நிலவியது

நெல்லை மாவட்டம் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் முதுநிலை மாணவர் ஒருவர், இளநிலை பட்டபடிப்பு படிக்கும் மாணவியை ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவியின் சகோதரர், அதே கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே, தகராறு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த மாணவியின் உறவினர்கள் சிலர் கல்லூரி வளாகத்திற்குள் புகுந்து மற்றொரு தரப்பினரை தகாத வார்த்தைகளால் பேசியதால் மோதல் வெடித்தது. இந்த வீடியோ வேகமாக பரவி வரும் நிலையில், மோதலில் ஈடுபட்ட 15க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்