சினிமா பாணியில் என்ட்ரி கொடுத்த நபர்கள்.. கந்து வட்டிக்காக கடத்திய கும்பல் | Thanthitv

Update: 2024-07-08 03:31 GMT

 நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கந்து வட்டிக்காக காரில் கடத்திச்செல்லப்பட்ட குடும்பத்தை மீட்ட போலீசார் 6 பேரை அதிரடி கைது செய்துள்ளனர். காரியாபட்டினம் நடுக்காடுவை சேர்ந்த ராஜேஷ்கண்ணா, செம்போடை மகாராஜபுரத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவரிடம் சிறுக சிறுக 17 லட்சம் ரூபாய் வட்டிக்கு கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் கந்துவட்டியுடன் சேர்த்து தர முடியாது என கூறியதால் நடராஜன் சிலருடன் சேர்ந்து ராஜேஷ்கண்ணா, அவருடைய மனைவி, குழந்தைகளை காரில் ஏற்றி கடத்தி சென்றனர். தகவலறிந்து சென்ற போலீசார் ராஜேஷ்கண்ணா குடும்பத்தை மீட்டநிலையில், நடராஜன் உள்பட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்