கண்ணை கவரும் மான்கள் கூட்டம்.. ரசித்து பார்த்த சுற்றுலா பயணிகள் | Mudumalai

Update: 2024-10-12 12:23 GMT
  • முதுமலை வனப்பகுதி முழுவதும் பச்சைப் பசேல் என காட்சியளிக்கும் நிலையில் சாலை ஓரங்களில் ஆயிரக்கணக்கான புள்ளிமான்கள் ஆங்காங்கே படையெடுத்து மேய்ச்சலில் ஈடுபட்டு வருகின்றன. கண்களுக்கு விருந்தளிக்கும் இந்த காட்சிகளை சுற்றுலா பயணிகள் வாகனத்தை நிறுத்தி ரசித்து செல்கின்றனர். அதிகளவில் மான் கூட்டங்களும் யானைகளும் உள்ளதால் வனவிலங்குகளை தொந்தரவு செய்யும் வகையில் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுப்பதோ வாகனத்தை அருகில் நிறுத்தவோ கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்