நிதி நிறுவன மோசடி வழக்கு..! உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு

Update: 2024-09-25 16:22 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இயங்கி வந்த

ஆலையம் நிதி நிறுவனத்தில் 3 கோடி ரூபாய் முதலீடு

செய்து ஏமாந்ததாக கூறி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில்

பலரும் மனு தாக்கல் செய்தனர். நிதி நிறுவனத்துக்கு

சொந்தமான சொத்துக்களை அடையாளம் கண்டு, விற்று,

முதலீடு செய்தவர்களுக்கு தொகையை திருப்பி வழங்க

சிறப்பு குழுவை அமைக்கவும், மனுதாரர்களையும்

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் என இணைத்து

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட கோரினர்.

இது குறித்து நான்கு வாரத்தில் முடிவெடுக்க பொருளாதார

குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

உத்தரவிட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்