ஸ்ரீமதி விவகாரம்.. கைதான தாய்மாமா.. தாய்க்கு பறந்த சம்மன்

Update: 2024-09-25 17:05 GMT

கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கில், மாணவியின் தாயார் செல்விக்கு சிறப்பு புலனாய்வு போலீசார் சம்மன் கொடுத்திருக்கின்றனர். இதற்கு முன், செல்வியின் அண்னன் செந்தில்முருகனை சிறப்பு புலனாய்வு போலீசார், சென்னையில் வைத்து கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, செந்தில்முருகன் கள்ளக்குறிச்சி அழைத்து வரப்பட்ட நிலையில், சிறப்பு புலனாய்வு போலீசாரை நேரில் பார்த்து தன் சகோதரரை கைது செய்தது குறித்து செல்வி கேள்வி கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வரும் 27 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி, அவருக்கு சிறப்பு புலனாய்வு போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்