ஆசை ஆசையாய் கட்டிய வீடு.. உயிரை பறித்த குவைத் சம்பவம்.. கலங்கடிக்கும் பெற்றோர்களின் கதறல்

Update: 2024-06-13 15:24 GMT

குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தஞ்சையைச் சேர்ந்த இளைஞர் மரணமடைந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... ஆதனூரைச் சேர்ந்த 28 வயதேயான புனார்ஃப் ரிச்சர்ட் ராய் 2019 முதல் குவைத்தில் என்.பி.டி.சி என்ற கட்டுமான கம்பெனியில் குவாலிட்டி இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை... கடந்த பிப்ரவரியில் வீட்டு கிரகப் பிரவேசத்திற்காக சொந்த ஊர் திரும்பிய அவர் ஒன்றரை மாதங்கள் இருந்து விட்டு மீண்டும் குவைத் சென்றுள்ளார்... இந்நிலையில் குவைத் தீ விபத்தில் சிக்கி புனார்ஃப் ரிச்சர்ட் ராய் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மகனின் இழப்பைத் தாங்க முடியாமல் அவரது தாயும் தந்தையும் கதறியழுதது காண்போரைக் கலங்கச் செய்தது...

Tags:    

மேலும் செய்திகள்