20க்கு மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து.. பரிதாப மரணம்

Update: 2024-10-03 08:43 GMT

பெங்களூருவில் இருந்து புறப்பட்ட ஆம்னி பேருந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சென்று கொண்டிருந்தது. முன்னால் சென்ற சரக்கு லாரியை முந்த முயன்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சுமார் 50 அடி தூரம் பேருந்து இழுத்து செல்லப்பட்டதால் ஓட்டுநர் வீர பிரதீப் உயிரிழந்தார். காயம் அடைந்த 20க்கும் மேற்பட்ட பயணிகள், அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்