"எதை தான் குடிக்கிறோம்.." குடத்துடன் வந்த கவுன்சிலர்.. பரபரப்பான மாநகராட்சி கூட்டம் | Tirunelveli

Update: 2024-09-30 17:08 GMT

நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் கிட்டு(என்கிற) ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் சுகபுத்திரா துணை மேயர் ராஜூ மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென ஆறாவது வார்டு மாமன்ற உறுப்பினர் பவுல்ராஜ், தோளில் குடத்துடன் கையில் பதாகை ஏந்தியபடி மாமன்ற அரங்கிற்குள் நுழைந்தார், இதனால் அங்கு பரபரப்பு சூழல் நிலவியது, அப்போது அவர் தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்கிறது என்றும், இதைத்தான் நாம் குடிக்கிறோம் என்று முழக்கமிட்டார். தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும் என சக மாமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்