தலைக்கேறிய மப்பில் போலீசிடம் இளைஞர் தெனாவட்டு பேச்சு..தீயாய் பரவும் வீடியோ காட்சி

Update: 2024-10-02 07:05 GMT

கோவையில் மதுபோதையில் காரை ஓட்டிச் சென்ற இளைஞர், சோதனை செய்த காவல்துறையினரை மிரட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. கோவை, காந்திபுரம் 100 அடி சாலையில் வாகன தனிக்கையில் ஈடுபட்ட போலீசார், தாறுமாறாக வந்த உயர் ரக கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது மதுபோதையில் காரில் இருந்து இறங்கிய இளைஞர் ஒருவர், நான் யார் தெரியுமா? நீ என்ன பெரிய ஆளா? என்று கேள்வி கேட்டு மதுபோதையில் அட்ராசிட்டியில் ஈடுபட்டார். இதையடுத்து அந்த நபரின் செல்போனை போலீசார் பறித்ததாக தெரிகிறது. இதில் ஆவேசம் அடைந்த அந்த நபர், போலீசாரை மிரட்ட ஆரம்பித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்