மாமியார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகள்... கரூரில் கொடூர சம்பவம் | Karur | TN Police | ThanthiTV

Update: 2024-09-21 06:32 GMT

மாமியார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகள்... கரூரில் கொடூர சம்பவம் | Karur | TN Police | Thanthi TV

கரூர் மாவட்டம் தென்னிலை அருகே தலையில் கல்லை போட்டு மாமியாரை கொலை செய்த மருமகளை போலீசார் கைது செய்தனர்.

தென்னிலை அருகே வெட்டுக்காட்டு வலசை பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தாய் வீட்டில் வசிக்கும் விஜயலட்சுமி தனது மகன், மகளை பார்ப்பதற்காக வெட்டுக்காட்டு வலசுக்கு சென்று வருவார்.

இந்நிலையில் வெட்டுக்காட்டு வலசுக்குசென்ற

விஜயலட்சுமிக்கும் , ஆடு மேய்க்க சென்ற அவரது

மாமியார் பார்வதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த விஜயலட்சுமி தலையில் கல்லை போட்டு மாமியாரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த

போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக

அனுப்பி வைத்தனர். விஜயலட்சுமியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்