ஸ்கூல் யூனிபார்மில் மாணவிக்கு தாலி கட்டி ஸ்டேட்டஸ் வைத்த +2 மாணவன்-ஆத்திரத்தில் பெற்றோர் செய்த செயல்

Update: 2024-07-02 02:53 GMT

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தாலி கட்டிய நிலையில் மாணவியும், மாணவனும் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாக பரவியதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குளித்தலையை அடுத்த நாகனூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள், தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகின்றார். கடந்த 29-ஆம் தேதி மாயமான அவரை, தோகைமலை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், பள்ளி சீருடையில் தாலி கட்டிக் கொட்ட நிலையில் அந்த மாணவி, சக மாணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், தோகைமலை காவல் நிலையத்தில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் மற்றும் உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்