பெண்கள் உள்ளாடைகளை வைத்து இளைஞர் செய்த செயல்.. இன்ஸ்டாவில் பார்த்து சாட்டையை சுழற்றிய போலீஸ்

Update: 2024-09-20 08:40 GMT

குடியாத்தத்தில் உள்ள கொத்தமாடிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கெளதம். இவர் இன்ஸ்டாகிராமில் பெண்களின் உள்ளாடையை அணிந்து கொண்டு, பெண்களை இழிவு படுத்தும் வகையில் ரீல்ஸ் போட்டார். மேலும், பெண்கள் குறித்து ஆபாசமாகவும், கொச்சையாகவும் இன்ஸ்டாவில் பாட்டு பாடினார். இதுகுறித்து திருச்சி மாவட்ட சைபர் கிரைம் பெண் காவலரான பிரீத்தி, பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் கெளதமை கைது செய்ய திருச்சி எஸ்.பி. வருண் குமார் தனிப்படை அமைத்தார். இதனையடுத்து, கெளதம் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். மேலும், கெளதமின் இன்ஸ்டாகிராம் ஐடியை முடக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்