திடீரென உயிரிழந்த கணவன்..அவசரமாக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்ட உடல்?-சம்பவத்திற்கு பின் மாயமான மனைவி

Update: 2024-07-22 18:15 GMT

கூலித் தொழிலாளி ஒருவரின் இறப்பில், அவரது மனைவி மீது சந்தேகம் இருப்பதாக கூறி பகீர் குற்றச்சாட்டுடன் உறவினர்கள் போலீசில் புகாரளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ஆத்துக்குட்டி பள்ளம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. நொச்சிப்பட்டியை சேர்ந்த வாசுகி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், மரூர்பட்டியில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மனைவியுடன் தங்கி பணிபுரிந்து வந்திருக்கிறார். இந்நிலையில், திடீரென கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்து விட்டதாக அவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே, உறவினர்கள் மற்றும் குடும்பத்தார் வருவதற்கு முன்பே கிருஷ்ணமூர்த்தியின் உடலை ஆலை உரிமையாளர் பிணவறைக்கு அனுப்பி வைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணமூர்த்தியின் மனைவி வாசுகி காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தியின் பெற்றோர், மகனின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி நாமக்கல் எஸ்.பி அலுவலகத்தில் புகாரளித்திருக்கும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்