தமிழக அரசு நடத்தும் 'ஈ-ஸ்போர்ட்ஸ்' - இளைஞர்கள் ஆர்வம்

Update: 2024-10-21 01:52 GMT

தமிழக அரசு நடத்தும் 'ஈ-ஸ்போர்ட்ஸ்' - இளைஞர்கள் ஆர்வம் 

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஈ-ஸ்போர்ட்ஸ் போட்டிகளில் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். செல்போனில் விளையாடுவதை மையமாக கொண்ட இந்த போட்டிகளில் கிரிக்கெட், கூடைப்பந்து உட்பட 8 பிரிவுகள் இடம்பெற்றன. இதில் மாநிலம் முழுவதும் 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக அரசு இந்த போட்டிகளை நடத்துவதாகவும், அடுத்த ஆண்டு ஒலிம்பிக் கமிட்டி நடத்தும் ஈ-ஸ்போர்ட்ஸ் போட்டியில் தமிழக வீரர்கள் பங்கேற்க வழிவகை செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்