பைக்கில் சாகசம் நொடியில் மரணம்.. "கண் வழியா ரத்தம்.." - கதிகலங்க விடும் காட்சிகள்

Update: 2024-10-21 03:59 GMT

பைக்கில் சாகசம் நொடியில் மரணம்.. "கண் வழியா ரத்தம்.." - கதிகலங்க விடும் காட்சிகள்

உளுந்தூர்பேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்ய முயன்ற இளைஞர் மின்கம்பத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

உளுந்தூர்பேட்டை உகீரனூர் பகுதியை சேர்ந்த ராகுல் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்வதற்காக 3 நண்பர்களுடன் சென்றுள்ளார் . உளுந்தூர்பேட்டை சேலம் புறவழி சாலையில் உள்ள ரவுண்டானா பகுதியில் வீலிங் செய்வதற்காக ராகுல் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற போது அங்கிருந்த மின்கம்பத்தில் மோதியதாக கூறப்படுகிறது. தலையில் பலத்த காயமடைந்த ராகுலை 108 ஆம்புலன்சில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராகுலின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏராளமானோர் மருத்துவமனையில் குவிந்தனர். ராகுலின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

Tags:    

மேலும் செய்திகள்