திருப்பூரை பதறவிட்ட திடீர் பேய் மழை.. காரில் ஒரு குடும்பமே.. பரபரப்பு காட்சிகள்

Update: 2024-10-21 04:03 GMT

திருப்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, துணி வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாநகர் பகுதியில் , நேற்று விடுமுறை தினம் என்பதால் , கடை வீதிகள் மற்றும் துணிக்கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதினர். இந்த நிலையில், 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. மழை வெள்ளம் பெருக்கெடுத்து, பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக, துணி விற்பனை மற்றும் கடை வீதிகளில் விற்பனை பாதிக்கப்பட்டது. விழாக்காலத்தில் மழை வெள்ளத்தால் வியபாரம் பாதிக்கப்படுவதாக, விற்பனையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்