2வது குழந்தைக்கு பின் பரிதாபமாக பிரிந்த தாயின் உயிர் | Gobichettipalayam | Erode | Thanthitv

Update: 2024-09-29 08:57 GMT

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பிரசவத்திற்கு பின் பெண் உயிரிழந்ததால், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சுண்டபாளையம் பகுதியை சேர்ந்த தம்பதி, கிருஷ்ணமூர்த்தி - மைதிலி. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், மைதிலி 2வது பிரசவத்திற்காக கோபிசெட்டிப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தை நல்லபடியாக பிறந்தும் மைதிலிக்கு ரத்தப்போக்கு நிற்காத நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோபி - திருப்பூர் சாலையில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்

Tags:    

மேலும் செய்திகள்