காணாமல் போன மகள் தலை.. பாதி உடலுடன் போட்டோ இணைத்து ஈமச்சடங்கு

Update: 2024-10-10 10:18 GMT

கடலுார் மாவட்டம் அரிசிப் பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் நித்யா, இவரது தோழி ஹரிணி. இவர்கள் இருவரும், சோழிங்கநல்லுாரில் தங்கியிருந்து பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். சம்பவத்தன்று பணிமுடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிகொண்டிருந்தபோது பின்னால் வந்த மினி லாரி மோதி, இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் பின்னால் இருந்த நித்யா மீது லாரி சக்கரம் ஏறி இறங்கி தலை சிதைந்து உயிரிழந்தார். பிரேத பரிசோதனை முடிந்து நித்யாவின் உடல், அவரது சொந்த ஊரான அரிசிபெரியாங்குப்பம் கொண்டுவரப்பட்டது. அங்கு அவரது உறவினர்கள், உடலை அடக்கம் செய்வதற்கு தயார் செய்தனர். ஆனால் விபத்தில் தலை சிதைத்துவிட்டதால், நித்யாவின் தலைக்கு பதில் அவரது புகைப்படத்தை உருவமாக செய்து வைத்து, இறுதி அஞ்சலி செலுத்தி உறுவினர்கள் உடலை அடக்கம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்