உக்கிரம் அடையும் சாம்சங் விவகாரம்..! பாதி வழியிலேயே ஊழியர்களை மடக்கி பிடிக்கும் போலீஸ் | Samsung

Update: 2024-10-10 10:59 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக சாம்சங் ஊழியர்கள், ஓரிடத்தில் திரண்டு வருகிறார்கள்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு, சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். இன்றைய தினம் போராட்ட திடலுக்கு வந்த சாம்சங் நிறுவன ஊழியர்களை, வழியிலேயே மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, சாம்சங் ஊழியர்கள் பொடவூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் விடுதி அருகே திரண்டு வருகின்றனர். சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் ஒன்று திரண்டு, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்