அத்துமீறும் வியாபாரிகள்? கொட்டும் மழையில் அனல் பறந்த வாக்குவாதம் - கோவையில் பரபரப்பு

Update: 2024-10-10 10:36 GMT

அத்துமீறும் வியாபாரிகள்? கொட்டும் மழையில் அனல் பறந்த வாக்குவாதம் - கோவையில் பரபரப்பு

கோவை பெரிய கடை வீதியில் வியாபாரிகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடைவீதியில் செல்லும் பொதுமக்களை வியாபாரிகள் அத்துமீறி கடைக்குள் அழைத்துச் சென்று பொருட்களை வாங்க வைப்பதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் வியாபாரிகள் சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணைக்காக சென்ற வியாபாரிகள் போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது,

போலீஸாருக்கும் வியாபாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்