முதல் முறை கூட்டத்தில் அதிகாரிகளை கதறவிட்ட மக்கள் சென்னை அருகே பரபரப்பு

Update: 2024-09-20 08:42 GMT

மதுராந்தகம் ஏரி தூர்வாரும் பணி எப்போது முடிவடையும் என்று அதிகாரிகளிடம் விவசாயிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில், முதல் முறையாக வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில், மதுராந்தகம் மற்றும் செய்யூர் தொகுதி விவசாயிகள் பங்கேற்றனர். அப்போது, மதுராந்தகம் ஏரி தூர்வாரும் பணி, 2 ஆண்டுகள் என அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு வருடமாக பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தனர். இதனால், 3 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருவதால், ஊரில் இருப்பதா அல்லது ஊரை காலி செய்வதா என்றும் கேள்வி எழுப்பினர். இதனால், கூட்ட அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கோரிக்கை மனுக்கள் மீது ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்