ஏஞ்சல் பட விவகாரம் வழக்கு - வரும் 28ம் தேதி தீர்ப்பு

Update: 2024-10-23 02:12 GMT

ஏஞ்சல் பட விவகாரம் வழக்கு - வரும் 28ம் தேதி தீர்ப்பு


தனக்கு எதிரான வழக்கை நிராகரிக்க கோரி, துணை முதல்வர் உதயநிதி தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பினை, வரும் 28ம் தேதி அறிவிப்பதாக, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உதயநிதி நாயகனாக நடித்த ஏஞ்சல் திரைப்படம்

80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும் இருபது சதவீத படப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டுமெனவும், 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டுமெனவும் ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்க கோரி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பில், தாக்கல் செய்த மனு நீதிபதி டீக்காராமன், முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், அக்டோபர் 28ம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்