சென்னை பாஜக மாவட்ட தலைவர் மீது வழக்கு - பாஜக நிர்வாகி பரபரப்பு புகார்

Update: 2024-07-02 11:51 GMT

கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி பாஜக நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். சென்னை வேளச்சேரியில் உள்ள பாஜக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பாஜக நிர்வாகி பாலசுப்ரமணியத்தை, கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சாய்சத்யன் அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து பாலசுப்பிரமணியம் போலீசில் புகாரளித்த நிலையில், சாய்சத்யன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்