வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு.. வீடு தேடி பறந்து வரும் உணவு | Rain | Chennai

Update: 2024-10-16 11:23 GMT

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ட்ரோன் மூலம் உதவிகள் வழங்க ஒத்திகை பார்க்கப்பட்டது... வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னையில் கன மழை கொட்டி தீர்த்தது... தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான உணவுகள், தண்ணீர் பாட்டில்கள், மற்றும் மருந்துகள் வழங்க மாநகராட்சி சார்பில் ட்ரோன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன...

அந்த வகையில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் ட்ரோன்களைப் பறக்கவிட்டு ஒத்திகை செய்யப்பட்டது. தாழ்வான பகுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகள், குறுகிய சாலைகள், படகு செல்ல முடியாத இடங்களில் ட்ரோன் பயன்படுத்தி 10 கிலோ வரை

அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்