சென்னையில் பிரபல கல்லூரி மாணவர்கள் செய்த அதிர்ச்சி சம்பவம் -நேரில் பார்த்து மிரண்ட போலீஸ்

Update: 2024-10-24 04:33 GMT

சென்னையில் பிரபல கல்லூரி மாணவர்கள் செய்த அதிர்ச்சி சம்பவம் -நேரில் பார்த்து மிரண்ட போலீஸ்

வீட்டிலேயே மெத்த பெட்டமின் தயாரித்த கல்லூரி மாணவர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் வைத்து பிளமிங் பிரான்சிஸ், நவீன், பிரவீன் பிரணவ், கிஷோர், ஞான பாண்டியன், அருண்குமார், தனுஷ் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 250 கிராம் மெத்த பெட்டமின் எனும் போதை பொருள் கைப்பற்றப்பட்டது.

இதில் பிரவீன் பிரணவ், கிஷோர், நவீன், தனுஷ் ஆகிய 4 பேரும் ராமாபுரத்தில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரி மாணவர்கள் என்பதும்

ஞான பாண்டியன் சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் முதுகலை வேதியல் பட்டப்படிப்பு படித்து வருவதும் தெரிய வந்தது.

இவர்கள் 5 பேரும் சேர்ந்து கொடுங்கையூர் பின்னி நகர் மெயின் ரோடு பகுதியில் உள்ள பிரவீன் பிரணவ் வீட்டில் மெத்தபெட்டமின் தயாரித்தது விசாரணையில் தெரிய வந்தது.

போதைப் பொருளை அருண்குமார் மூலம் வாங்கியதும், தனுஷ் 3 லட்ச ரூபாய் பணத்தை பிரவீனிடம் கொடுத்துள்ளார்.

போதைப் பொருளைத் தயாரித்து விற்றால் லட்சக் கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என கணக்கு போட்டு இவர்கள் வீட்டிலேயே ஆய்வகத்தை வைத்து குறிப்பிட்ட போதை பொருளை தயாரித்துள்ளனர். ஆனால் அது சரியாக வரவில்லை என கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்