நரகமான வாழ்க்கை.. செத்து பிழைத்த சிறுத்தை சிவா தம்பி.. கடைசியில் தேவதையாக வந்த அத்தை மகள்

Update: 2024-10-24 06:35 GMT

நரகமான வாழ்க்கை.. செத்து பிழைத்த சிறுத்தை சிவா தம்பி.. கடைசியில் தேவதையாக வந்த அத்தை மகள்

முதல் மனைவி அளித்த புகாரில் கைதாகி பின் ஜாமினில் விடுவிக்கப்பட்ட நடிகர் பாலா, தன் அத்தை மகளை மூன்றாவதாக திருமணம் செய்திருக்கிறார்....

வீரம் திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு தம்பியாக நடித்து பிரபலமானவர்தான் நடிகர் பாலா..

மலையாள நடிகரான இவர், இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியும் கூட...

இந்நிலையில், கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள கோயில் ஒன்றில், தன் அத்தை மகளான கோகிலா என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்திருக்கிறார் நடிகர் பாலா..

இவர் முதல் மனைவி அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் வெளியே இருப்பது குறிப்பிடத்தக்கது...

பிரபல பாடகியான அம்ருதாவை நடிகர் பாலா காதலித்து திருமணம் செய்திருந்தார்...

இருவருக்கும் 12 வயதில் மகள் ஒருவர் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் ஒருவரையொருவர் பிரிந்தனர்...

இதனிடையே, மருத்துவர் ஒருவரை பாலா திருமணம் செய்து கொண்ட நிலையில், அந்த திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை...

இந்நிலையில், தன்னை பற்றியும், தனது மகள் குறித்தும் பாலா சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவதாக முன்னாள் மனைவி அம்ருதா தொடுத்த வழக்கில், பாலா கைது செய்யப்பட்டிருந்தார்...

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, தன் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் ஜாமின் கேட்ட நிலையில், நீதிமன்றமும் ஜாமின் வழங்கி விடுவித்தது...

இந்நிலையில்தான், தனது தாய் மாமன் மகளை மூன்றாவதாக திருமணம் செய்திருக்கிறார்..

திருமணத்திற்கு பின் பேசிய பாலா, அண்மையில் உடல் நலம் குன்றி அவதிப்பட்டு வந்த தன்னை, தன் அத்தை மகள்தான் கவனித்து வந்ததாகவும், இந்த திருமணம் நீடித்து நிலைக்கும் எனவும் தெரிவித்த நிலையில், உடல் நலம் சரியில்லாததால் தனது தாய் இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்...

Tags:    

மேலும் செய்திகள்