சென்னையில்14 வது மாடியில் இருந்து தவறி விழுந்த போலீஸ் -துடி துடித்து நின்ற உயிர்... பெரும் சோகம்

Update: 2024-10-19 10:10 GMT

சென்னை எழும்பூர் புதுபேட்டை

காவலர் குடியிருப்பில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற போது 14 வது மாடியில் இருந்து தவறி விழுந்து ஆயுதப்படை காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியை சேர்ந்த செல்வம் முருகன், சென்னை புதுப்பேட்டையில் உள்ள ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்தார் ‌.

இந்நிலையில், சென்னை எழும்பூர் புதுபேட்டை காவலர் குடியிருப்பில் நான்கு வருடங்களாக திறக்கப்படாமல் உள்ள புதிதாக கட்டப்பட்ட குடியிருப்புக்களில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யும் பணியில்

ஆயுதப்படை காவலர் செல்வமுருகன், கமலக்கண்ணன் ஆகியோர் ஈடுபட்டு வந்தனர். அப்போது குடியிருப்பின் 14வது மாடிக்கு சென்று தண்ணீர் தொட்டிக்கு செல்லும் வால்வை முடுவதற்காக சென்ற செல்வ முருகன் தவறுதலாக கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்