"பிறந்தநாள் அன்று 250 சவரன் நகை" - துப்பாக்கியுடன் கலக்கிய ஊர்வலம்

Update: 2024-10-19 11:13 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில், வேதாந்த தேசிகன் சன்னதி உள்ளது. இவர் திருவள்ளூரில் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள வீரராகவர் பெருமாளின் சீடர் ஆவார்.

வேதாந்த தேசிகரின் 756வது பிறந்த நாளான இன்று, வீரராகவ பெருமாள் ஸ்ரீபெரும்புதூருக்கு வருகை புரிந்து, இருவரும் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்து காட்சியளித்து வருகின்றனர். வழி நெடுகிலும் பக்தர்கள் பூ, பழம் ஆகியவை படைத்து வீரராகவ பெருமாளை வணங்கி வருகின்றனர். மேலும் வீரராகவ பெருமாள் 250 சவரன் தங்க நகைகள் அணிந்து இருப்பதால், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வீதி உலா வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்