ஓடும் பேருந்தில் மாணவர்களிடையே மோதல்.. சென்னையில் பயங்கர சம்பவம் | Chennai

Update: 2024-10-19 12:21 GMT

சென்னையில், ஓடும் பேருந்தில் பாட்டுப் பாடுவது தொடர்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓட்டேரியை சேர்ந்த அசோக்குமார் என்பவரின் மகன், அயனாவரத்தில் உள்ள ரயில்வே பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி முடிந்து தனது சக மாணவர்களுடன் மாநகர பேருந்தில் சென்றபோது, தனியார் மருத்துவ கல்லூரி 2ம் ஆண்டு பயிலும் ஓட்டேரியை சேர்ந்த மாணவர்களும் பயணித்துள்ளனர். அப்போது பாட்டுப் பாடுவதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட நிலையில், சக பயணிகள் மற்றும் நடத்துநர், இருதரப்பு மாணவர்களையும் சமாதானம் செய்தனர். இந்நிலையில், ஓடும் பேருந்தில் இருந்து மாணவர் ஒருவர் கீழே இறங்கியபோது தவறி விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த தனியார் பேருந்து மோதி காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சம்பவம் குறித்து இருதரப்பினரும் அளித்த புகாரின் அடிப்படையில்,

ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்