பல பெண்களுடன் தொடர்பு.. தட்டி கேட்ட காதலிக்கு சென்னை ஜிம்முக்குள் வைத்து விழுந்த சரமாரி அடி

Update: 2024-09-07 15:59 GMT

சென்னை தண்டையார்பேட்டையில் தனியார் உடற்பயிற்சி கூடம் செயல்பட்டு வருகிறது. அங்கு ராயபுரத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடற்பயிற்சி செய்து வந்து இருக்கிறார். இந்த நிலையில் அங்கு ஏற்கனவே பயிற்சியில் ஈடுபட்டு வந்த நாகராஜ் இளம் பெண்ணை காதலித்து வந்து இருக்கிறார். இதனால் இளம் பெண்ணிடம் இருந்து 45 சவரன் நகை, 10 லட்சம் பணம் மற்றும் விலையுயர்ந்த இரு சக்கரவாகனம் ஆகியவற்றை வாங்கி இருக்கிறார். தொடர்ந்து நாகராஜின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால் சந்தேகமடைந்த பெண் அவரை பின் தொடர்ந்து கண்காணித்து இருக்கிறார். அதில் நாகராஜ் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்.இது குறித்து நாகராஜிடம் கேட்ட போது இளம்பெண்ணைச் சரமாரியாகத் தாக்கி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இளம் பெண் அளித்த புகாரில் நாகராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்