ஆம்ஸ்ட்ராங் படுகொலை vs ஆற்காடு சுரேஷ்... BSP தலைவர் ஆனந்தன் சொன்ன பகீர் தகவல்

Update: 2024-07-23 02:36 GMT

ஆற்காடு சுரேசுக்கும், ஆம்ஸ்ட்ராங்குக்கும் எந்தவிதமான பகையும் கிடையாது என பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடந்ததாக பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருவதாக தெரிவித்தார். ஆற்காடு சுரேஷ் பகுஜன் சமாஜ் கட்சியில் பணியாற்றியவர் என்றும் அவருக்கும், ஆம்ஸ்ட்ராங்குக்கும் எந்தவிதமான பகைமையும் கிடையாது என்றும் தெரிவித்தார். வழக்கறிஞர் சங்க தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆம்ஸ்ட்ராங்கின் அரசியல் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் இந்த கொலையை செய்திருக்கலாம் என்றும், அரசியல் கட்சியினர் பலருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்றும் அவர் கூறினார். ஆம்ஸ்ட்ராங்கை ரவுடி போல சித்தரிக்க முயற்சி செய்யப்படுவதாகவும், அவர் மீது போடப்பட்ட 6 வழக்குகளுமே பொய் வழக்குகள் என்றும் ஆனந்தன் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்