சென்னைக்குள் வந்த சம்போ செந்தில்?.. ஒற்றை போன் கால்.. என்ட்ரி கொடுத்த பிரபல ரவுடிகள்

Update: 2024-07-23 13:22 GMT

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், பிரபல ரவுடியான சம்போ செந்திலை போலீசார் தேடி வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, திருவொற்றியூரை சேர்ந்த கட்டுமான நிறுவன உரிமையாளர் ஒருவர், சென்னை புது வண்ணாரப்பேட்டையில் உள்ள பழைய கட்டடம் ஒன்றை எடுத்து அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வருகிறார். இந்நிலையில், அவரை சிங்கம் பட வில்லன் கதாபாத்திரமான மயில்வாகனம் போல் ரவுடிகள் சரவணன் மற்றும் முட்டை கிருஷ்ணன் ஆகியோர் தொடர்பு கொண்டிருக்கின்றனர். செல்போன் மூலம் சம்போ செந்திலை பேச சொல்லி, சம்பந்தப்பட்ட இடத்தில் வீடு கட்ட வேண்டும் என்றால் தங்களுக்கு 20 லட்ச ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என அவர்கள் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதில், கடந்த ஜனவரி மாதம் முதல் மாதந்தோறும் ஒரு லட்ச ரூபாய் பணம் சம்போ செந்தில் தரப்புக்கு கொடுக்கப்பட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இதை அறிந்த மற்ற ரவுடிக் கும்பல், சம்போ செந்திலுக்கு கொடுப்பது போல், தங்களுக்கும் பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டியதாக தெரிகிறது. இதனால், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி நபர் போலீசில் புகாரளித்த நிலையில், ரவுடிகள் 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்