தி.மலையில் சிறைப்பிடிக்கப்பட்ட வாகனங்கள்.. கடுப்பான ஹைவே ஆபிசர்ஸ்

Update: 2024-09-05 08:41 GMT

திருவண்ணாமலையில் சாலையோரம் குப்பை கொட்ட வந்த வாகனங்களை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சிறைபிடித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை புனல்காடு பகுதியில் கொட்டக்கூடாது என மாநகராட்சி ஆணையர் காந்திராஜன் வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக கூறப்படுகிறது. இதனால், வேங்கிக்கால் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை, ஊராட்சி பணியாளர்கள் மயானம் அருகே சாலையோரமாக கொட்டி வந்தனர். இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக புகார் எழுந்த நிலையில், வழக்கம்போல குப்பையை கொட்ட வந்த வாகனங்களை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சிறைப்பிடித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்