காக்க வந்த நண்பனை நண்பர்களே முதுகில் குத்திய சோகம்... சென்னையில் அதிர்ச்சி

Update: 2024-09-05 09:03 GMT

மதுபோதையில் மோதிக்கொண்ட நண்பர்களை தடுக்கச் சென்ற மெடிக்கல் ஊழியர் தாக்கப்பட்ட வழக்கில், மூவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரை சேர்ந்தவர் சுரேஷ். 30 வயதான இவர், மெடிக்கல் ரெப்பாக வேலை செய்து வரும் நிலையில், சம்பவத்தன்று இரவு தனது சகோதரருடன் சேர்ந்து பணி முடிந்து வீடு திரும்பியிருக்கிறார். அப்போது, அனகாபுத்தூர் அண்ணா சலையில் உள்ள கால்பந்து மைதானம் அருகே, சுரேஷின் நண்பர்கள் மதுபோதையில் சண்டையிட்டு மோதி கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், அவர்களை தடுத்து நிறுத்தி சமாதானம் பேச சென்ற சுரேஷை, அவருடைய சகோதரருடன் சேர்ந்து நண்பர்கள் தாக்கி இருக்கின்றனர். இதில் காயமடைந்த சுரேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, அவர் போலீசில் புகாரளித்தார். விசாரணையை கையிலெடுத்த போலீசார், திருமுடிவாக்கம் அடையாறு ஆற்று பாலம் அருகே பதுங்கி இருந்த மூவரையும் சுற்றி வளைத்திருக்கின்றனர். அப்போது, போலீசாரிடமிருந்து தப்பிக்க மூவரும் ஆற்று பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் படுகாயமடைந்தனர். தொடர்ந்து மூவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்