"முகத்தில் 3 முறை..கண்ணெல்லாம் கருப்பாகிருச்சு.."ஆணியில் தொங்க விட்ட கொடூரம்..பாதிக்கப்பட்ட மாணவன் அதிர்ச்சி தகவல்

Update: 2023-08-29 05:32 GMT

சேலம ் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவர்களை ஆணியில் தொங்கவிட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பனமரத்துப்பட்டி ஒன்றியம் கம்மாளப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, ஆறாம் வகுப்பு படித்து வரும் இரண்டு

மாணவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர்.இதனை கண்ட அதே பள்ளியில் படிக்க கூடிய ஒன்பதாம் வகுப்பு

மாணவர்கள் வம்புக்கு இழுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆறாம் வகுப்பு மாணவன் அவர்களை ஒருமையில் பேசி இருக்கிறான். இதனால் கோபமடைந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ஆறாம் வகுப்பு மாணவர்களை வகுப்பறையில் உள்ள ஆணியில் தொங்க விட்டுள்ளனர். மற்றொரு மாணவனை வகுப்பறை கதவில் தொங்கவிட்டுள்ளனர். இதில் காயமடைந்த ஒரு மாணவன் கழுத்து வலியால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பள்ளியில் நடைபெற்ற சம்பவம் குறித்து ஆசிரியர்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்