பிரேமலதா விஜயகாந்த் தீவிர பிரசாரம் : அ.தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு

விக்ரவாண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

Update: 2019-10-16 05:32 GMT
விக்ரவாண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.  கெடார், அன்னியூர், ஆசூர், விக்ரவாண்டி, ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த் ,  சீமான் கட்சியை தடை செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறுவதாகவும்,  ஆனால் ஜம்மு -காஷ்மீர் விவகாரத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியவர் ஸ்டாலின் என்றும் கூறினார். அப்படி என்றால் திமுகவையும்  தடைசெய்ய வேண்டுமென பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்