செம்போடையில் ரூ.12 கோடி மதிப்பில் ஐ.டி.ஐ பயிலகம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுக்கா செம்போடையில், புதிதாக கட்டப்பட உள்ள ஐடிஐ பயிலகத்திற்கான, இடத்தை, கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் ஆய்வு செய்தார்.

Update: 2019-06-16 06:35 GMT
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுக்கா செம்போடையில், புதிதாக கட்டப்பட உள்ள ஐடிஐ பயிலகத்திற்கான, இடத்தை, கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேதாரண்யம் மாணவர்களுக்கு கல்வி வசதி ஏற்படுத்திக் கொடுப்பதில் காலத்தின் கட்டாயமாக அமைந்து விட்டது என்றார். செம்படையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 12 கோடி ரூபாயில், ஐடிஐ பயிலகம், துவங்க உள்ளதாகவும், மாணவர்கள் படித்த உடன் வேலை கிடைத்திடவும் சொந்தமாக தொழில் துவங்குவதற்கு ஏற்றவாறு பாடப்பிரிவுகள் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்