TNPL தொடர்- நெல்லையில் தெறிக்கவிட்ட 2 அணிகள் -கடைசி வரை திக் திக் ஆட்டம்

Update: 2024-07-22 05:47 GMT

டி.என்.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டு லீக் போட்டிகளில், திண்டுக்கல் மற்றும் திருப்பூர் அணிகள் வெற்றி பெற்றன.

நெல்லையில் நடந்த முதலாவது ஆட்டத்தில் கோவை மற்றும் திண்டுக்கல் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய கேப்டன் ஷாருக்கான் 25 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். பின்னர் களமிறங்கிய திண்டுக்கல் அணி 19 புள்ளி 2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 49 பந்துகளில் 96 ரன்கள் விளாசிய பாபா இந்திரஜித், ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். இதேபோல் இரண்டாவதாக சேலம் அணிக்கு எதிரான போட்டியில், திருப்பூர் அணி வெற்றி பெற்றது. 192 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சேலம் அணி, 141 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Tags:    

மேலும் செய்திகள்