டிஎன்பிஎல் தொடர்- இன்று இரவு நெல்லையில் மோத போகும் இரு அணிகள் -முதலிடத்திற்கு முன்னேறுமா சேப்பாக்?

Update: 2024-07-22 06:32 GMT

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்று நடைபெறும் 21வது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திருச்சி அணிகள் மோதவுள்ளன. நெல்லையில் இரவு 7.15 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கவுள்ளது. புள்ளிப்பட்டியலில் திருச்சியும் சேப்பாக்கும் முறையே 2 மற்றும் 3ம் இடங்களில் உள்ளன. இன்றையப் போட்டியில் வெற்றி பெறும் அணி முதலிடத்திற்கு முன்னேறக்கூடும். வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடக்கூடும் என்பதால் இன்றையப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்