ஷ்ரேயஸ் ஐயர் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்ற ருத்துராஜ் அணி

Update: 2024-09-07 15:50 GMT

துலீப் கோப்பை டெஸ்ட் தொடரில், ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்தியா D அணியை, ருத்துராஜ் தலைமையிலான இந்தியா C அணி வீழ்த்தியது. முதல் இன்னிங்சில் இந்தியா D 168 ரன்களும், இந்தியா C 164 ரன்களும் எடுத்த நிலையில், 2-வது இன்னிங்சில் இந்தியா D அணி 236 ரன்கள் எடுத்தது, இதைத்தொடர்ந்து 233 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்தியா C அணி, 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா C அணி 6 புள்ளிகள் பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்