ரூ160 கோடி நிலுவை தொகையை வழங்க வேண்டும் - பிசிசிஐ- க்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எச்சரிக்கை

டிசம்பர் 31-ம் தேதிக்குள் நிலுவைத் தொகையான ரூபாய் 160 கோடியைச் செலுத்தாவிட்டால், 2023-ம் ஆண்டு உலக கோப்பையை நடத்தும் வாய்ப்பு வழங்கப்படாது என்று, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-க்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2018-12-23 06:54 GMT
டிசம்பர் 31-ம் தேதிக்குள் நிலுவைத் தொகையான ரூபாய் 160 கோடியைச் செலுத்தாவிட்டால், 2023-ம் ஆண்டு உலக கோப்பையை நடத்தும் வாய்ப்பு வழங்கப்படாது என்று, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-க்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2016-ம் ஆண்டு  டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்ற போது, போட்டிகளை ஒளிபரப்ப இந்திய அரசாங்கம் வரிச்சலுகை எதுவும் வழங்கவில்லை என கூறப்படுகிறது.  இதனால் போட்டியை ஒளிபரப்பிய தனியார் தொலைக்காட்சி நிறுவனம் வரிகள் அனைத்தையும் கழித்துக்கொண்டு மீதி தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் வழங்கியது.  இந்த நிலையில் நிலுவை தொகை 160 கோடி ரூபாயை பிசிசிஐ செலுத்தவேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது..
Tags:    

மேலும் செய்திகள்