ரஞ்சிக் கோப்பை - இரட்டைச் சதம் விளாசிய புஜாரா

Update: 2024-10-22 02:53 GMT

ரஞ்சி கோப்பை டெஸ்ட் தொடரில் சவுராஸ்டிரா அணிக்கு விளையாடி வரும் புஜாரா இரட்டைச் சதம் விளாசி அசத்தினார். சத்தீஸ்கர் அணிக்கு எதிரானப் போட்டியில் களத்தில் நிலைத்து நின்ற புஜாரா 234 ரன்கள் அடித்தார். முதல் தரப் போட்டிகளில் புஜாராவின் 18வது இரட்டைச் சதமாக இது அமைந்தது. 383 பந்துகளைச் சந்தித்து களத்தில் புஜாரா நங்கூரம் பாய்ச்சி நின்றதால் இந்தப் போட்டியை சவுராஸ்டிரா அணி டிரா செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்