திருக்குறள் சொல்லி விருது வழங்கிய மத்திய அமைச்சர் எல் முருகன்

Update: 2024-10-24 16:30 GMT

இந்திய பள்ளி உளவியல் சங்கத்துடன் இணைந்து தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்,பள்ளி உளவியலில் ஆய்வு நோக்கங்கள் என்ற தலைப்பிலான சர்வதேச கருத்தரங்கு இன்று தொடங்கியது. வரும் 26-ம் தேதி வரை நடைபெறும் கருத்தரங்கை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.மேலும் கருத்தரங்கிற்கான புத்தகத்தையும் வெளியிட்ட அவர், ஆராய்ச்சியாளர்களுக்கு விருதுகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய எடவ முருகன், பேச்சின் தொடக்கத்தில், கற்றதனால் ஆய பயன் என தொடங்கும் திருக்குறளையும் பேச்சின் நிறைவில் மனத்துக்கண் எனத் தொடங்கும் திருக்குறளையும் கூறி அதன் பொருளையும் எடுத்துரைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்