அமைச்சர் பொன்முடியுடன் வாக்குவாதம்... ஊ.ம.தலைவியின் கணவரால் பரபரப்பு | Minister Ponmudi

Update: 2024-10-02 13:43 GMT

விழுப்புரம் திருக்கோவிலூர் வி.புத்தூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் பொன்முடியுடன் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் குடிநீர் பிரச்சினைக்காக முறையிட்ட போது எழுந்த வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊராட்சி மன்ற தலைவி பூர்ணிமாவின் கணவர்

சிவராஜ் தான் மூன்றரை ஆண்டுகளாக குடிநீருக்காக போராடி வருவதாக தெரிவித்தார். அதற்கு அமைச்சர் பொன்முடி, என்னைப் பார்த்து ஏன் பிரச்சினையை தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பி, உடனடியாக தென்பெண்ணை ஆற்றில் இருந்து அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கும் குடிநீர் இணைக்கப்படும் என கூறினார். இது தொடர்பான வாக்குவாதத்தால் கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்