"அனைவரும் உறுதியேற்க வேண்டும்" - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு | Droupadi Murmu

Update: 2024-09-19 16:55 GMT

தூய்மையான, ஆரோக்கியமான, வளர்ந்த இந்தியாவை உருவாக்க, அனைவரும் உறுதியேற்க வேண்டும் என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் இன்று நடைபெற்ற துப்புரவுப் பணியாளர் மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். நமது துப்புரவுப்பணி நண்பர்கள் முன்வரிசை தூய்மைப் போராளிகள் என்றும், நோய்கள், அழுக்கு மற்றும் சுகாதார அபாயங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றனர் என்றும் கூறினார். திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கம் இல்லாத நிலையை பராமரிக்கும் அதே வேளையில், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மையில் தேசிய இலக்குகளை அடைய வேண்டும் என்றார். தூய்மை இந்தியா இயக்கத்தை ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு தெருவிலும் முன்னெடுத்துச் செல்லவும், இந்த இயக்கத்திற்காக உடலுழைப்பு வழங்கவும் குடிமக்கள் அனைவரும் முன்வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். தூய்மையான இந்தியா, ஆரோக்கியமான இந்தியா மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்க, அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்