தொண்டருக்கு தங்கச் சங்கிலி வழங்கி, அறிவுரை கூறிய அகிலேஷ் யாதவ்

பந்தயத்தின்படி, தோல்வியை ஏற்று, பாஜக நபரிடம் பைக்கை இழந்த தன்னிடம், அகிலேஷ் யாதவ் கூறியதை மறக்க முடியாது என சமாஜ்வாடி கட்சி தொண்டர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-16 08:49 GMT
உத்தரபிரதேச தேர்தலின் போது, தங்கள் கட்சிதான் வெல்லும் என சமாஜ்வாடி-பாஜக தொண்டர்கள், தங்களது வாகனங்களை பந்தயமாக வைத்துள்ளனர். ஆனால், தேர்தல் தோல்வியை ஏற்று, பாஜக நபரிடம், தனது பைக்கை சமாஜ்வாடி தொண்டர் கொடுத்துள்ளார். இதையறிந்து, அகிலேஷ் யாதவ், தன்னிடம் தொலைபேசியில் பேசியதாகவும், தங்கச் சங்கிலி பரிசளித்தது, பந்தயத்தில் ஈடுபடக் கூடாது என அறிவுரை வழங்கிய, கவுரவமாக நடத்திய விதத்தை மறக்க முடியாது என்றும் அக்கட்சி தொண்டர் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்