"யாரையும் காணோம்.." - இடத்தை பார்த்து கதறும் 9 வயது சிறுவன் - கல் நெஞ்சையும் கலங்கவிடும் சோகம்

Update: 2024-08-02 03:35 GMT

வயநாடு நிலச்சரிவில் தனது குடும்பத்தாரை பிரிந்து ஆதரவற்ற நிலையில் 9 வயது சிறுவன் தவிப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூரல்மலை பகுதியை சேர்ந்த சிறுவன் நிலச்சரிவில் சிக்கியதாகவும், அருகில் இருந்தவர்கள் தன்னை மீட்டதாகவும் கூறியுள்ளார். அம்மா அப்பா, பாட்டி யாரையும் காணவில்லை என சிறுவன் பதற்றத்துடன் கூறியுள்ளார். இந்த சூழலில், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மனநல ஆலோசனை கொடுத்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்