வெளியே வர ஆரம்பித்த நிஜ கொடூரம்..சாலியாற்றில் கொத்தாக உடல்கள்..புதைக்க கூட இடம் தராத பூமி

Update: 2024-08-04 07:23 GMT

வெளியே வர ஆரம்பித்த நிஜ கொடூரம்..சாலியாற்றில் கொத்தாக உடல்கள்..புதைக்க கூட இடம் தராத பூமி - இறந்த பின்னும் விரட்டும் சாபம்

வயநாட்டில் நிலச்சரிவு பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 365ஆக அதிகரித்துள்ளது. 148 சடலங்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இன்னும் 206 பேர் குறித்த விபரங்கள் தெரியவில்லை. இறந்தவர்களில் 30 குழந்தைகள் ஆவர். 93 நிவாரண மையங்களில் 10 ஆயிரத்து 42 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சாலியாரில் நேற்று 12 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன் மூலம் சாலியாற்றில் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. திங்கள் கிழமைக்குள் தேடுதலை முடிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்