முண்டகை, சூரல்மலை பகுதிகளில் இரவில் தெரியும் நடமாட்டம்.. எச்சரிக்கை

Update: 2024-08-04 04:58 GMT

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட சூரல் மலை, முண்டகை பகுதிகளில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், பாதிப்புக்குள்ளானவர்களின் வீடுகள் அல்லது பகுதிகளுக்கு இரவில் அத்துமீறி நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். மேலும் போலீசாரின் அனுமதியின்றி யாரும் உள்ளே நுழையக்கூடாது என்றும், அவசர நிலைகளைச் சமாளிக்க தீயணைப்புப் படைக் குழுவும் சூரல் மலையில் இருக்கும் என்றும் பினராயி விஜயன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்