வயநாடு பேரழிவிலும் ஓயாத மனித கிருமிகளின் அட்டூழியம்

Update: 2024-08-04 10:38 GMT

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்த நிலையில் அவரது கருத்துக்கு எதிராக பொதுமக்களை திசை திருப்பும் வகையில் அவதூறு பிரச்சாரம் செய்து கருத்து பதிவிட்டதாக 2 நாள்களில் 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதல்வரின் நிவாரண நிதி உதவிக்கு எதிராக சமூக வலை தளங்களில் அவதூறு பிரச்சாரம் செய்ததாக இதுவரை 279 முகநூல் கணக்கு அடையாளம் காணப்பட்டு அவற்றை முடக்குவதற்கு சட்டப்படி நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்